×

ஆதிக் அகமது கொலைக்காக இந்தியா மீது தாக்குதல் அல்கொய்தா மிரட்டல்

புதுடெல்லி: ஆதிக் அகமது கொலைக்கு பழி வாங்கும் விதமாக இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. மாபியா கும்பல் தலைவனாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆதிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த வாரம் சனிக்கிழமை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது 3 நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆதிக் அகமது மற்றும் அவரது தம்பி அஷ்ரப் அகமது கொலைக்கு நிச்சயம் பழி வாங்குவோம் என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய துணைகண்ட அல்கொய்தா வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆதிக் அகமது, அஷ்ரப் அகமது இருவரும் தியாகிகள். நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுவோம். இருவர் கொல்லப்பட்டதற்கு நாங்கள் நிச்சயம் பழி வாங்குவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதிக் அகமது கொலைக்காக இந்தியா மீது தாக்குதல் அல்கொய்தா மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Al Qaeda ,India ,Aadiq Ahmed ,New Delhi ,Adeeq Ahmed ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...