×

செக் மோசடி வழக்கில் 6 மாத சிறையை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி மேல்முறையீடு

சென்னை: கடந்த 2014ல் கடனுக்காக இயக்குனர் லிங்குசாமி கொடுத்த 1 கோடியே 35 லட்ச ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

The post செக் மோசடி வழக்கில் 6 மாத சிறையை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Lingusamy ,Chennai ,Dinakaran ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா