×

நாட்டின் ஒற்றுமைக்காக உயிரையும் கொடுப்பேன் மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: ரம்ஜான் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது: மேற்குவங்கத்தில் அமைதி வேண்டும். வெறுப்பு பேச்சுக்கள் மூலம் சிலர் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றனர். யாரும் நாட்டை பிளவுப்படுத்த அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமைக்காக என் உயிரையும் தருவேன். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பாஜ முயற்சிக்கிறது. மேற்குவங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன். அரசியல் எதிரிகளின் பணபலம், உளவு அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து போராட தயாராக உள்ளேன். ஆனால் ஒருபோதும் அவர்களுக்கு அடிபணிய மாட்டேன்.

சிலர் பாஜவிடம் பணம் வாங்கி கொண்டு இஸ்லாமிய வாக்குகளை பிரிப்பதாக சொல்லப்படுகிறது. மேற்குவங்கத்தில் யாராலும் பாஜவுக்காக இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிக்க முடியாது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என உறுதி எடுத்து கொள்ள வேண்டும். பிரிவினை சக்திகளுக்கு எதிராக வாக்களிப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற தவறினால் நிச்சயமாக நாம் அனைத்தையும் இழந்து விடுவோம். இவ்வாறு ஆவேசமாக கூறினார்.

The post நாட்டின் ஒற்றுமைக்காக உயிரையும் கொடுப்பேன் மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Mamata Banerjee ,Kolkata ,Ramzan ,
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...