×

கிரிக்கெட் விளையாடிய போது 14 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் ஹதாஸ்பர் பகுதியில் வேதாந்த் தமன்கோங்கர் (14) என்ற சிறுவன், கோடை விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், இதுகுறித்து தந்தையிடம் தெரிவித்தார். உடனடியாக அவரது தந்தை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றார்.

ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் சிறுவனை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். மற்றொரு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவர்கள் சிறுவன் வேதாந்த் தமன்கோங்கர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும் திடீர் மாரடைப்பால் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வனவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் வேதாந்தின் திடீர் மரணத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

The post கிரிக்கெட் விளையாடிய போது 14 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Tags : Pune ,Vedant Thamankongar ,Hadasbar ,Maharashtra ,
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...