×

நகைகளை கேட்டதால் பிரச்னை; இளம் பெண் தூக்குப்போட்டு சாவு: கணவனிடம் போலீஸ் விசாரணை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (28). இவரது கணவர் தீனதயாளன். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. மனைவியின் நகைகளை அடமானம் வைத்து செலவு செய்ததுடன் துன்புறுத்திவந்ததாக தெரிகிறது. கணவரின் தொந்தரவு தாங்க முடியாமல் பிரியா, திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே இதுசம்பந்தமாக பிரியா, மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து தனது நகைகளை மீட்டு கொண்டு தாய் வீட்டில் இருந்துள்ளார். இதன்காரணமாக கடும் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், நகைகளை கொண்டு வரச் செல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரியா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் சென்று பிரியாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவின் கணவன் தீனதயாளனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நகைகளை கேட்டதால் பிரச்னை; இளம் பெண் தூக்குப்போட்டு சாவு: கணவனிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Priya ,Tirumukoodal village ,Deenadayalan ,
× RELATED காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி முகாம்