- கோயம்ப்டு சந்தை
- அண்ணாநகர்
- சென்னை கோவை சந்தை
- திண்டுக்கல்
- மதுரை
- வேலூர்
- நலகோட்டா
- திருச்சி
- ஒசூர்
- சேலம்
- கர்நாடகா,
- ஆந்திரப் பிரதேசம்
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஓசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தினமும் லாரிகளில் பூக்கள் வருகிறது. இன்று அட்சய திருதியை முன்னிட்டு வரத்து குறைவால் ஒரு கிலோ கனகாம்பரம் 800க்கும் சாமந்தி 240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ மல்லி 400க்கும் ஐஸ் மல்லி, ஜாதிமல்லி முல்லை 300க்கும் அரளி 200க்கும் சம்பங்கி 100க்கும் சாக்லேட் ரோஸ் 80க்கும் பன்னீர் ரோஸ் 90க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது,‘‘அட்சய திருதியை மற்றும் வரத்து குறைவால் கனகாம்பரம், சாமந்தி பூக்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கனகாம்பரம் படுஜோராக விற்பனை செய்யப்பட்டது. கிலோ 1,000 ரூபாய் என்று கனகாம்பரம் விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் புறநகர் பூ வியாபாரிகள் பூக்களை அள்ளி சென்றனர். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் முடிந்த பின்பு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு: கனகாம்பரம் ரூ.800க்கு விற்பனை appeared first on Dinakaran.