×

புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்புக்காக டெலியோஸ்-2 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது!!

சென்னை : புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்புக்காக டெலியோஸ்-2 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்கு தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் டெலியோஸ்-1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது. டெலியோஸ்-2 செயற்கைகோளுடன் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சரியாக பகல் 2.19க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக 25 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று பகல் 12.49 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

The post புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்புக்காக டெலியோஸ்-2 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!