×

ஆதிக் அகமது கொலைக்கு பழித்தீர்க்கும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் : அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல்

டெல்லி : ஆதிக் அகமது கொலைக்கு பழித்தீர்க்கும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் ரவுடியாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஆதிக் அகமது பின்னாளில் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். 2004 முதல் 2009 வரை சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாக இருந்த நிலையில், இவர் மீது பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகள் இருந்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். குற்ற வழக்கில் சிறையில் இருந்த ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமது ஆகியோர் கடந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட போது, இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இஸ்லாமிய மதப்பண்டிகையான ரம்ஜான் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமதுவை தியாகிகள் என குறிப்பிட்ட நிலையில், ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய மதத்தினரை விடுதலை செய்வோம் என்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

The post ஆதிக் அகமது கொலைக்கு பழித்தீர்க்கும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் : அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : India ,Adhik Ahmed ,Delhi ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...