×

வாலிபர் மீது போக்சோ வழக்கு

 

நெல்லை, ஏப். 22: நெல்லை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள கீழசெவல் பகுதியை சேர்ந்தவர் கந்தையா மகன் சுடலைமணி (30). இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனால் இரு வீட்டாரும் சம்மதித்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து சேரன்மகாதேவி பெண்கள் நல பாதுகாப்பு அதிகாரி ஞானஜெயா, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் சுடலைமணி, அவரின் தந்தை கந்தையா உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதால் சுடலைமணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர்.

The post வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Poxo ,Voliber ,Paddy ,Boxo ,Volliber ,
× RELATED சிறுமியின் கை, கால்களை கட்டி பாலியல் தொந்தரவு: போக்சோவில் முதியவர் கைது