×

ஆடு திருட்டு; 2 பேர் மீது வழக்கு

 

திருச்சி, ஏப்.22: திருச்சி அருகே ஆடு திருடிய வாலிபர் உள்பட 2 பேர் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே மருதாண்டக்குறிச்சியை சேர்ந்தவர் அருள்முருகன்(47). இவர் வீட்டருகே நேற்று முன்தினம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அருள்முருகன் சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்ேபரில் போலீசார் விசாரணை நடத்தி, குளித்தலை தாலுகா காவல்காரன்பட்டியை ேசர்ந்த சிவா (27) உள்பட 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆடு திருட்டு; 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,Somarasampet ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு