×

நாகூரில் நள்ளிரவில் விஏஓ காருக்கு தீ வைப்பு

 

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே நள்ளிரவில் விஏஓ காருக்கு தீ வைத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி(42). நாகப்பட்டினம் அருகே வடகுடியில் விஏஓவாக பணியாற்றி வரும் இவர், நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தாராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அவரது காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடி விட்டினர். கார் தீப்பற்றி எரிந்ததை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் தாங்களாகவே தண்ணீர் ஊற்றி காரில் எரிந்த தீயை அணைத்தனர். இதில், காரின் முன்பகுதி மட்டும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், விஏஓவின் காருக்கு முன் விரோதம் காரணமாக தீவைத்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post நாகூரில் நள்ளிரவில் விஏஓ காருக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagore ,Nagapattinam ,Nagapatnam ,Nagaur ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...