- புளியந்தோப்பு, செம்பியம்
- மாதவரம்
- பேசின் பாலம்
- இன்ஸ்பெக்டர்
- புவனேஸ்வரி
- புளியந்தோப்பு டிகே முடி தெரு.…
- செம்பியம்
- புளியந்தோப்பு
- தின மலர்
மாதவரம்: புளியந்தோப்பு டி.கே.முதலி தெருவில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாக பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மன்(22) என்பதும், இவர் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரமணா நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய திரு.வி.க.நகர், பொன்னுசாமி நகரை சேர்ந்த லாரன்ஸ் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
The post புளியந்தோப்பு, செம்பியம் பகுதியில் கத்தியுடன் ரகளை 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.