×

மாணவிக்கு டார்ச்சர்; ஆசிரியருக்கு தர்மஅடி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கொடியம் கிராமத்தை சேர்ந்த சகலகலாதரன் (59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு எடுக்க சென்றார். அப்போது, தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு சாக்லெட் கொடுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி, நேற்று சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேனில் ஏற்றினர். அப்போது அவரை, பொது மக்கள் சூழ்ந்து கொண்டு, சராமாரியாக தாக்கினர். ஒருவழியாக தலைமை ஆசிரியரை போலீசார் மீட்டு, வேனில் ஏற்றிச் சென்றனர்.

The post மாணவிக்கு டார்ச்சர்; ஆசிரியருக்கு தர்மஅடி appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Sakalakaladharan ,Kodiyam ,Vitthalapuram ,Villupuram ,Dharmaadi ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் தேனீக்கள்...