×

பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் (எ) கருப்பு குமார் (54). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று காலை வீட்டில் இருந்து ஆரணி ரங்கன் தெரு வழியாக இவர் நடந்து வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர், இவரை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குமார், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கருப்பு குமார், பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி என்பதும், இவன் மீது கடந்த 2013ல் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்டாவை கொலை செய்த வழக்கு உள்ளதும், தற்போது திருந்தி வாழ்ந்து வந்ததும் தெரிந்தது. மேலும் விசாரணையில் வெங்கட்டாவின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து இவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Old Vannarpettai ,Thandaiyarpet ,Kumar (A) Karupu Kumar ,Old Vannarpet ,Arani Rangan Street ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...