×

புளியந்தோப்பு, செம்பியம் பகுதியில் கத்தியுடன் ரகளை 2 ரவுடிகள் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு டி.கே.முதலி தெருவில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாக பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் (22) என்பதும், இவர் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரமணா நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய திரு.வி.க.நகர், பொன்னுசாமி நகரை சேர்ந்த லாரன்ஸ் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post புளியந்தோப்பு, செம்பியம் பகுதியில் கத்தியுடன் ரகளை 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Pulianthoppu, Sempiyam ,Perambur ,Basin Bridge ,Inspector ,Bhubaneswari ,Pulianthoppu DK Mudi Street.… ,Sempiyam, ,Pulianthoppu ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு