×

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவனுக்கு போலீசார் வலை

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வினிதா (29). இவரது கணவர் லெனின் சுந்தர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் வினிதா, செம்மஞ்சேரி பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் பிரியா (32). ஒரு மாதத்திற்கு முன்பு பிரியா, வினிதாவிடம் காஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். பலமுறை வினிதா அந்த சிலிண்டரை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், இன்று, நாளை என பிரியா காலம் கடத்தி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று வினிதாவின் தம்பி சிவா பிரியாவிடம் சென்று காஸ் சிலிண்டரை தரும்படி கேட்டுள்ளார். அப்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரியாவின் 17 வயது மகன், ஒரு பெட்ரோல் குண்டை வினிதா வீட்டின் மீது வீசி உள்ளார். பெட்ரோல் குண்டு வீட்டின் வெளி சுவற்றில் பட்டு கீழே விழுந்ததால் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை. இது குறித்து வினிதா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.

The post வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவனுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Semmancheri ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம்...