×

சிறுமி பாலியல் தொந்தரவு வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது

புதுக்கோட்டை, ஏப்.21: கீரனூர் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோவில் கைதான வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பரவயல் சேர்ந்த வடிவேல் (39). சில வாரங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நிலையில் வடிவேலுவை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வடிவேலுவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமி பாலியல் தொந்தரவு வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Pudukottai ,Kiranur ,POCSO ,
× RELATED மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்