×

ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

 

தொண்டி: ஏழைகளுக்கு ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உணவு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி,கறி, புத்தாடை உட்பட உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தொண்டியில் நடைபெற்றது. தொண்டி பேரூர் தலைவர் சையது அப்துல் காதர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, புத்தாடை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை தமுமுகவினர் வழங்கினர்.

தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, திமுக தொண்டி செயலாளர் இஸ்மத் நானா, பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சுலைமான், மமக மாவட்ட துணைசெயலாளர் தொண்டி ராஜ், மமக ஒன்றிய செயலாளர் காமராஜ்,செயலாளர் பரக்கத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

The post ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Dondi ,Tamil Nadu ,Muslim ,Thondi ,eve ,Dinakaran ,
× RELATED பேச்சு போட்டியில் தொண்டி மாணவி முதலிடம்