×

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம்

 

மானாமதுரை, ஏப்.21: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து, மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியில் எம்பி பதவி பறிப்பு நடவடிக்கையை கண்டித்தும், பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை மக்களுக்கு தெரியப்படுத்தவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று காலை ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மானாமதுரை கீழ்கரையில் காந்தி சிலை பஸ் ஸ்டாப் எதிரே உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் நடந்த கண்டன போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய இணைஅமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் சுப.காசிராஜன், நகர் தலைவர் கணேசன், கிழக்கு வட்டார தலைவர் ஆரோக்கியதாஸ், மேற்க்கு வட்டாரத் தலைவர் கரு.கணேசன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கரு.சோனைராஜ், எஸ்சி, எஸ்டி நகர் தலைவர் பழனிவேல்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்புவனம், இளையான்குடி வட்டார காங்கிரஸ் கட்சியினர், பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து கோஷமிட்டனர். மானாமதுரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Manamadurai ,Congress ,President ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...