×

முன்விரோதத்தால் தகராறு செய்தவர்கள் மீது வழக்கு

 

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் குமார்(40). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் டூவீலரில் வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவர் ஓட்டிவந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இதுதொடர்பாக பிரேம் உறவினர்களுக்கும், குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குமார் சாலையோரத்தில் நிற்கும் போது பிரேம் என்பவரின் உறவினர்கள் பிச்சைமணி, கெண்டியார்முருகன், தனித், நாகபாண்டி, மருது என்ற முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தகராறு செய்து, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து குமார் புகாரில், ஜெயமங்கலம் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post முன்விரோதத்தால் தகராறு செய்தவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Murugan ,Kumar ,Melamangalam Melatheru ,Dinakaran ,
× RELATED கோயில் செயல் அலுவலரை தாக்கியவர் மீது வழக்கு