×

(தி.மலை) வீடு புகுந்து 18 பவுன் நகை, ₹2 லட்சம் திருட்டு கீழ்பென்னாத்தூரில் பட்டப்பகலில் துணிகரம்

கீழ்பென்னாத்தூர், ஏப்.21: கீழ்பென்னாத்தூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் திருடி சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கண்ணகி நகரை சேர்ந்தவர் விஜயராஜ்(39). இவரது மனைவி சுதா(36). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். தம்பதி இருவரும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் தெருவில் தண்ணீர் கேன் விற்பனை கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு கடை வியாகரத்திற்கு வந்துவிட்டனர். இதனைதொடர்ந்து மீண்டும் மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டின் முன் கதவை திறந்து சென்று பார்த்தபோது வீட்டின் பின் கதவை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ₹2 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக, கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை கைரேகை நிபுணர் குழுவினர் டிஎஸ்பி சுந்தராஜன் தலைமையில் விரைந்து வந்து அங்கு பதிவாகியிருந்த கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். இதனை தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post (தி.மலை) வீடு புகுந்து 18 பவுன் நகை, ₹2 லட்சம் திருட்டு கீழ்பென்னாத்தூரில் பட்டப்பகலில் துணிகரம் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Kilpennathur ,Kilibennathur ,Tiruvannamalai District ,Th. Malai ,
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில்...