×

பாளையில் பழ வியாபாரியை தாக்கிய தென்காசி ஏட்டு மீது வழக்கு

 

நெல்லை, ஏப். 21: பாளை பெருமாள்புரம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (60). தள்ளுவண்டி பழ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்தபிறகு தள்ளுவண்டியுடன் வீட்டுக்கு சென்றபோது அங்கு
பைக்கில் வந்த நபர், இவரது பழவண்டி மீது மோதினார். மேலும் இதை முருகன் தட்டிக்கேட்டபோது முருகனை தாக்கி, பழவண்டியை தள்ளிவிட்டதோடு மிரட்டல் விடுத்து சென்றார். இதில் காயமடைந்த முருகனை அங்கிருந்தோர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் நடத்திய விசாரணையில் முருகனை தாக்கியது தென்காசி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் கருணா சாமுவேல் என்பது தெரியவந்தது.

The post பாளையில் பழ வியாபாரியை தாக்கிய தென்காசி ஏட்டு மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tenkasi Attu ,Palai ,Nellie ,Murugan ,Rediyarpatti ,Palai Perumalpuram ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...