×

நிதி நிறுவனங்களில் வைப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் வைப்புத்தொகையை திரும்ப பெற தக்க ஆவணங்களுடன் புகார் தரலாம்

சென்னை: செ ன்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிக்கை:
ட்ரீம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட், கே.எஸ்.ராமசாமி கவுண்டர் தெரு, கே.கே.புதூர், கோயம்புத்தூர் நிறுவனத்தின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1,58,50,999 மதிப்பிலான அசையும் சொத்துகள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிளசிங் அக்ரோ பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், காஜியார் வளாகம், வடக்கு வாசல் எஸ்.எஸ்.காலனி, மதுரை என்ற நிறுவனத்தின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.13,11,330 மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜீவன் பிராப்பர்ட்டி புரோமோட்டர்ஸ் இந்தியா லிமிடெட், முதல் தளம், பட்டரைகார தெரு, கோரி பாளையம், மதுரை என்ற நிறுவனத்தின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், இடைமுடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சன் ஸ்டார் அக்ரோ பார்ம்ஸ் இந்தியா லிமிடெட், கிருஷ்ணன் தெரு, எம்.எஸ்.சாலை, கட்டயன்விளை, ரூ.22,00,000 மதிப்பிலான அசையும் மற்றும் அசையா, ராஹத் டிரான்ஸ்போர்ட் கம்பெனி, ராஜா நகர், புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் என்ற நிறுவனத்தின் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 59 வாகனங்கள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வைப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வைப்புத் தொகையை திரும்ப பெற, தக்க ஆவணங்களுடன், கூடுதல் காவல்துறை இயக்குநர் அலுவலகம், பொருளாதாரக் குற்றப்பிரிவு, அசோக் நகர், சென்னை-600 083 என்ற முகவரியில் இயங்கி வரும் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நிதி நிறுவனங்களில் வைப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் வைப்புத்தொகையை திரும்ப பெற தக்க ஆவணங்களுடன் புகார் தரலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Economic Offenses Police ,Dream Makers Global Pvt Ltd ,KS Ramasamy ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...