×

கண்ணிவெடியில் சிக்கி ஒருவர் கால் துண்டிப்பு: 3 பேர் படுகாயம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே குருவங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். காட்டு ஐயனார் கோயில் அருகே இவரது முந்திரி காட்டில், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (55), இளையகுமார்(27), 8ம் வகுப்பு மாணவன் ரகுபதி(13), மருதுபாண்டியன்(23) ஆகிய 4 பேர் முந்திரிக்கொட்டை பொறுக்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி ஒன்று வெடித்து 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கால் துண்டான ரங்கநாதன், படுகாயமடைந்த ரகுபதி ஆகிய இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். கண்ணிவெடிகள் காட்டு பன்றிகளுக்காக பூமிக்கடியில் வைக்கப்பட்டதா அல்லது வனவிலங்குகளை வேட்டையாடவா? என்பது குறித்து ஆலடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கண்ணிவெடியில் சிக்கி ஒருவர் கால் துண்டிப்பு: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Rajendran ,Kuruvanguppam ,Aladi ,Cuddalore district ,Kattu Iyanar temple ,Dinakaran ,
× RELATED ₹18 கோடி மதிப்பில் நடந்து வருகிறது மந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி