×

வேல் முருகன் கோரிக்கை போலீசாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

சட்டப் பேரவையில் போலீஸ் துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நேற்று நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:
வேல்முருகன்(தவாக): போலீஸ் நிலையங்களில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த 1997ம் ஆண்டில் பயிற்சி பெற்று போலீசாராக பணியில் அமர்ந்தவர்களில் சிலருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள 180க்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு பெறாமல் இருக்கின்றனர்.
அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். குறிப்பாக எஸ்ஐ, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, எஸ்பி என்று பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியுள்ளது. கலைஞர் முதல்வராக இருந்த போது போலீஸ் ஏட்டுகளுக்கு எஸ்எஸ்ஐ என்று பதவி உயர்வு வழங்கினார்.
அதேபோல தற்போது வழங்க வேண்டும். சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: அனைவரும் சமம் என்ற நோக்கில் அண்ணா பிறந்த நாளில் விடுவிக்க அரசு அறிவித்துள்ளது.
வேல்முருகன்: மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கல்லூரி மூடும் நிலைக்கு வந்துள்ளது. அதற்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: மாமல்லபுரம் கலைக் கல்லூரியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சேகர் பாபு: வீர வக்ர பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம். நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

The post வேல் முருகன் கோரிக்கை போலீசாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vel Murugan ,Legislative ,Assembly ,Dinakaran ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...