×

சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கிய விவகாரம் நடிகர் அர்னவ் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் அர்னவ் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்னவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திவ்யாவும், நானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி திவ்யா அடிக்கடி என்னுடன் சண்டையிட்டார். திவ்யாவை நான் தாக்கியதாகக் கூறுவது தவறு. அவர் தான் என்னை துன்புறுத்தினார்.

இது தொடர்பாக எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு நேறறு விசாரணைக்கு வந்த போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அர்னவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, வழக்கை ரத்து செய்ய கோரும் அர்னவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கிய விவகாரம் நடிகர் அர்னவ் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Arnav ,Divya ,Chennai ,
× RELATED பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள்...