×

தண்ணீர் பந்தல் திறப்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு தேரடி மற்றும் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் அதிமுக சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக் குழு தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க தலைவர் டி.பொன்னுரங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன், ஒன்றிய கவுன்சிலர் எம்.நரேஷ்குமார், தர்மேஷ் குமார், ஆர்.கருணாகரன், சு.அனல்சேகர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்பியும் அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ.அரி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், நீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார். இதில் சசிகுமார், முனிரத்தினம், கோதண்டராமன், என்.கோபு, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், சுந்தரம், அரிதாஸ், கணேசன், பால கிருஷ்ணா, சிதம்பரம், பரந்தாமன், ஜி.லோகநாதன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Water Awning Opening ,Thiruthani ,Tiruvalangadu Teradi ,Thiruvalangadu railway station ,
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...