×

திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு: ஜெயக்குமார் எம்பி பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், இப்தார் நோன்பு திறப்பு விழா திருவள்ளூர் அருகே ஈக்காட்டில் நடைபெற்றது. வட்டார தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருவேற்காடு டி.ரமேஷ், மாவட்ட முதன்மை துணைத் தலைவர் தலைவர் விக்டரி எம்.மோகன், மாவட்ட நிர்வாகிகள் புழல் குபேந்திரன், வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன் முன்னிலை வகித்தனர். கிளாம்பாக்கம் எம்.சிவக்குமார், ஈகை தேவேந்திரன், வழக்கறிஞர் ஏ.ஜி.சுரேஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்தார் நோன்பை திறந்து வைத்து பேசினார்.

இதன்பிறகு அனைத்து மதத்தினரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் தரப்பில் தொழுகை நடத்தினர். இதன்பிறகு அனைவருக்கும் நோன்பு கஞ்சி கொடுக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மதுசூதன ராவ், வீராபுரம் தாஸ், ஸ்ரீராமுலு, வேப்பம்பட்டு பொன்ராஜ், கோதண்டராமன், கலக்குறீங்க ஆஞ்சநேயா எப்.அர்னால்டு, வீரமணி, ரோஷ், எஸ்.பிரவீன், மூர்த்தி, ஏ.யூனிஸ், எஸ்.பிலால் அஹமது, எஸ்.பிரவீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு: ஜெயக்குமார் எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Iftar ,Tiruvallur ,South ,District Congress ,Jayakumar ,Tiruvallur South District Congress Committee ,Eakat ,Tiruvallur.… ,Tiruvallur South District Congress ,Iftar fast ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...