×

கோடைக்காலத்தை முன்னிட்டு நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கோடைக்காலத்தை முன்னிட்டு நாகர்கோவில், நெல்லை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரம் – நெல்லை இடையே ஏப்ரல் 27, மே 4,11,18,25-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லை – சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28, மே 5,12,19,26-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். நெல்லையில் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.20-க்கு சென்னை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கோடைக்காலத்தை முன்னிட்டு நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Chennai ,Nagarko ,Nelly ,Thiruvananthapuram ,Thambaram ,
× RELATED சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத்...