சென்னை: நெல்லை அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக உலகராணி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் உலகராணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பற்களைப் பிடுங்கி ஏஎஸ்பி பல்வீர் சிங் சித்திரவதை செய்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்தது.
The post நெல்லை அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: விசாரணை அதிகாரியாக உலகராணி நியமனம்..!! appeared first on Dinakaran.