×

எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசியப்போது இளைஞர் ஒருவர் பலி

சேலம்: எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசியப்பொது அங்கு குளித்து கொண்டிருந்த மோகன் குமார் என்ற வாலிபர் சம்பவஇடத்திலேயே பறித்தவமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் ஆற்றில் வெடி மருந்து வீசிய பெருமாள் என்பவரை பூலாம்பட்டி போலீசார் கியது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீனவர்கள் வெடி மருந்து தோட்டாவை வீசி உயிரிழந்த மீன்களை பிடித்து விற்பனை செய்து வருவது வழக்கம், இதனிடையே நாமக்கல் மாவட்டம் பள்ளிப்படி கிராமத்தை சேர்ந்த மோகன் குமார் மற்றும் பூபதி ஆகியோ இருவரும் ஆணை புலிக்காடு பகுதியில் உள்ள உறவினர்கள் மாரி என்பவற்றின் வீட்டிற்கு வந்துள்ளார்கள்.

அதே பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார் அப்போது மீன் பிடிப்பதற்காக அங்கு வந்த பெருமாள் என்பவர் வெடி மருந்து தோட்டாவை காவிரி ஆற்றில் வீசியப்பொது தண்ணீரில் குளித்து கொண்டிருந்த மோகன் குமார் வெடி விபத்தில் சம்பவஇடத்திலேயே பறித்தவமாக உயிரிழந்துள்ளார்.

அப்போது பாறை மீது நின்று கொண்டிருந்த பூபதி தனது உறவினர்களுடன், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததோடு அங்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதோடு வெடி மருந்து வீசிய முருகனை கைது செய்து பூலாம்பட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனைப்பிடிப்பதற்காக போடப்பட்ட வெடி மருந்து தோட்டாவில் வாலிபர் ஒருவர் சிக்கி பறித்தவமாக உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

The post எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசியப்போது இளைஞர் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Cauvery River ,Edappadi ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...