- மும்பை உயர் நீதிமன்றம்
- கங்காபூர்வாலா
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். சி.
- தின மலர்
சென்னை : மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வி. கங்கபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் புதிய பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரநாத் பந்தாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி பதவியேற்றார். அவரும் அதே மாதம் 21ம் தேதி ஓய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா இருந்து வருகிறார். 6 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி இல்லாத நிலையில், நேற்றைய தினம் டெல்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வி. கங்கபூர்வாலாவை நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் கொலீஜியம் வலியுறுத்தி உள்ளது. ஏற்கனவே ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்து இருந்தது. அதன் மீது ஒன்றிய அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், அவரது பதவிக்காலமும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருப்பதால் அந்த பரிந்துரையை கொலீஜியம் திரும்ப பெற்றுள்ளது. அதே போல உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானிற்கு மாற்றவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. பணி மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்துள்ளது.
The post மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கங்கபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க புதிய பரிந்துரை!! appeared first on Dinakaran.