×

ஏமனில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு!!

ஏமன் : ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் காயம் அடைந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சரியாக திட்டமிடப்படாததால் அசம்பாவிதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post ஏமனில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Yemen ,Sana'a ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்