- பொதுவுடைமை மறுமலர்ச்சி முகாம்
- அகூர் ஊராட்சி
- செம்பனர்கோயில்
- தாஹ்சில்தார் காந்திமதி
- அகூர்
- மயிலாதுதுரை மாவட்டம்
- குறை ஊராட்சி
- ஆகூர் பஞ்சாயத்தான்
- தின மலர்
செம்பனார்கோயில், ஏப்.20: செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் முகாமில் தாசில்தார் காந்திமதி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கண்மணி, தனி வட்டாட்சியர் சுந்தரி, துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள்குறைதீர் முகாமில் ஆக்கூர், பண்டாரவாடை, உடையவர் கோவில்பத்து, மடப்புரம், முடிகண்டநல்லூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை தாசில்தாரிடம் கொடுத்தனர். இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆக்கூர் ஊராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.