×

குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

கரூர், ஏப்.20: கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆண்டாய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, வளாகத்தின் சுற்றுப்புற தூய்மை, அலுவலக தூய்மை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் , கணினி அறை, பதிவறையில் உள்ள கோப்புகள மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.மேலும், குடிநீர், கழிப்பறை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கோட்டாட்சியர் புஷ்பாதேவி, தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முரளிதரன், குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.


The post குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kuluthlai RTO ,Karur ,Karur District ,Collector ,Prabhu Shankar ,Revenue Commissioner ,Karur District Kulithalai ,Kulithalai RTO ,Dinakaran ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்