×

ஆடு திருடிய வாலிபர் கைது

காரியாபட்டி, ஏப்.20: நரிக்குடி அருகே ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன்(64). இவர் ஆலத்தூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். தனது ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வழக்கம் போல் தூங்க சென்றார். நள்ளிரவு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார். அப்போது 2 ஆடுகளை இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றதை பார்த்து சத்தம் போட்டார். இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விரட்டி சென்றனர். எனினும் ஆடுகளை திருடி சென்ற நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து அ.முக்குளம் போலீசில் குருநாதன் புகார் செய்தார். போலீசார் விசாரணை செய்ததில் திருப்புவனம் புதூரைச் சேர்ந்த நாகராஜன்(23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

The post ஆடு திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Narikudi ,Panchayat Union ,Aladhur ,Dinakaran ,
× RELATED லோடுமேன் வீட்டில் ₹3.70 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி