×

காங்கயம் அருகே சூதாடிய 10 பேர் கைது

காங்கயம், ஏப்.20: காங்கயம் அருகே பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்த போலீசார் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காங்கயம் அருகே முத்தூர் சாலை பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் காங்கயம் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காங்கயம் – முத்தூர் சாலை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் சுற்றி வளைத்து, மடக்கி பிடித்து கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post காங்கயம் அருகே சூதாடிய 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gangaim ,Kangayam ,Dinakaran ,
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது