×

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, ஏப்.20: தர்மபுரியில் நாளை(21ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படும். இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்து வித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாளை (21ம் தேதி) காலை 10 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,District ,Collector Shanthi ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...