×

16 வயது மகளை கொன்று ஊராட்சி செயலர் தற்கொலை

கே.வி.குப்பம்: மகளை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெருமாங்குப்பத்தை சேர்ந்தவர் பாபு‌ (48), காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர் மாச்சனூர் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் லோஷினி(18) காட்பாடி தனியார் கல்லூரில் படிக்கிறார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட தனுஷா(16) என்ற மகளும் இருந்தார். பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் பாபு மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாபு பிடிஓ அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மாலையில் திரும்பியவர் தனுஷாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், மொட்டை மாடிக்கு சென்று கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post 16 வயது மகளை கொன்று ஊராட்சி செயலர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pact ,K.K. ,Kubbam ,Padu ,Vellore District ,K. ,Dinakaran ,
× RELATED 6 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும்