×

வியாசர்பாடியில் காங். மாவட்ட செயலாளர் கழுத்தறுத்து தற்கொலை: கடன் தொல்லை காரணமா?

பெரம்பூர்: வியாசர்பாடியில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் நேற்று கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். சென்னை வியாசர்பாடி, எம்கேபி நகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் சந்த் (55). இவர், எம்கேபி நகர் 3-வது பிரதான சாலையில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி கவுசல்யா, மகள்கள் ஜெயஸ்ரீ,நேகா உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயக்கு திருமணம் முடிந்து, தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் ஹரிஷ் சந்த் இருந்து வந்தார். கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கினால் இவரது துணிக்கடையில் வியாபாரம் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே அவரது 2-வது மகள் நேகாவுக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. தனது மகள் திருமணத்துக்கு தேவையானவற்றை செய்வதற்கு போதிய பணமின்றி ஹரிஷ் சந்த் தவித்து வந்துள்ளார். அவருக்கு கடன் பிரச்னையும் அதிகரிக்கவே, கடந்த சில நாட்களாகவே கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ஹரிஷ் சந்த் வீட்டில் இருந்தார். அப்போது சமையலறையில் இருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு நேகாவும் உறவினர்களும் ஓடிவந்து மீட்டனர். பின்னர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே ஹரிஷ் சந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  இதுகுறித்து தகவலறிந்ததும் எம்கேபி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், எஸ்ஐ கல்வியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஹரிஷ் சந்த்தின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் தொல்லையால் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது….

The post வியாசர்பாடியில் காங். மாவட்ட செயலாளர் கழுத்தறுத்து தற்கொலை: கடன் தொல்லை காரணமா? appeared first on Dinakaran.

Tags : Vyasarabadi ,District secretary ,Perambur ,North ,Chennai West District Congress ,Vyasarpadi ,Vyasarabadi Congress ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்...