![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32579358/thumb.jpg)
சென்னை: பல கோடி ரூபாய் மோசடி செய்த நொளம்பூர் ஏர்.ஆர்.டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சென்னை நொளம்பூர் ஏர்.ஆர்.டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் உள்ள ஆவணத்தில் உள்ள நகைகளை பறிமுதல் செய்யப்பட்டுவதாக கூறப்படுகிறது. சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏர்.ஆர்.டி. குழுமம் மால், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களை செய்து வருகின்றது.
இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12,000 வட்டி தருவதாக கூறி பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். இதனிடையே அளித்த வாக்குறுதிபடி நடந்து கொள்ளவில்லை என்றும், வட்டி முறையாக தரவில்லை என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ஏர்.ஆர்.டி குழுமத்தை நடத்தி வந்த இயக்குநர்களின் வீடுகள், கடைகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏப்ரல் 6-ம் தேதி சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சோதனையின் இறுதியில் ஏர்.ஆர்.டி நகைக்கடையில் நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையின் போது அப்பகுதி பொதுமக்கள், சில வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post சென்னை நொளம்பூர் ஏர்.ஆர்.டி நகைக்கடைகளில் போலீசார் சோதனை: இன்றைய சோதனையில் ஆவணங்களை கைப்பற்றலாம் எனத் தகவல் appeared first on Dinakaran.