×

ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது..!!

தென்காசி: ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடக்கு கிடார குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (23) ஜே.சி.பி., டிரைவர். 2020ம் ஆண்டு நாச்சியார்புரம் அருகே ஆடு திருடிய சம்பவத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த தகராறில் விஜய் என்பவர் கொலை செய்யப்பட்டார்.மணிகண்டனும் சேர்க்கப்பட்டு வழக்கு தென்காசி கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் விஜய் கொலை வழக்கு விசாரணைக்காக மணிகண்டன் தென்காசி நீதிமன்றம் சென்று திரும்பிய மணிகண்டன் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தேடிவந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் இசக்கிமுத்து, இசக்கி பாண்டி மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரும் துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கோர்ட்டில் சரணடைய வந்துள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் தனிப்படை போலீஸ் ஆஜர்படுத்தியது. இளைஞர் மணிகண்டன் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

The post ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Manikandan ,Kidarakulam ,Alangulam ,Tenkasi District ,Kidarakulam village ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...