×

ஆலங்குளம் இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது

தென்காசி: ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்காக தென்காசி நீதிமன்றம் சென்று திரும்பிய மணிகண்டன் வெட்டிக் கொல்லப்பட்டார். வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் தனிப்படை போலீஸ் ஆஜர்படுத்தியது. இளைஞர் மணிகண்டன் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஆலங்குளம் இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Tenkasi ,Manikandan ,Kitarakulam ,Dinakaran ,
× RELATED ஆலங்குளம் அருகே மருமகளை கத்தரிக்கோலால் குத்திய மாமனார் கைது