×

காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திரு.பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகள் விஜய் (வயது 7) மற்றும் பூமிகா (வயது 4) ஆகிய இருவரும் 17-4-2023 அன்று மாலை நெல்வாய் ஏரியில்எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின்
பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,CM B.C. ,G.K. stalin ,Chennai ,Chief Minister ,Mukhera ,Kanchipuram district ,CM ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...