- ராமேஸ்வரம்
- சர்வ அமாவாசி
- சித்ராய்
- அக்னிதீர்த்தா கடற்கரை
- ராமநாதபுரம்
- அக்னி தீர்த்த சமுத்திரம்
- சர்வ அமாவாஸ்யா
ராமநாதபுரம்: சித்திரை மாத சர்வ அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி வருகின்றனர். இன்று சித்திரை மாதம் சர்வ அமாவாசை என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தடைந்தனர். இன்று காலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், அங்குள்ள புரோகிதர்களிடம் எள்ளு பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் வடமாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து, பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
The post சித்திரை மாத சர்வ அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்; அக்னி தீர்த்த கடற்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!! appeared first on Dinakaran.