×

முத்துப்பேட்டை அருகே சிறுமி குளித்த பாத்ரூமில் நுழைந்த வாலிபர் போக்சோவில் கைது

முத்துப்பேட்டை, ஏப்.18: முத்துப்பேட்டை அருகே சிறுமி குளித்தபோது பாத்ரூமில் புகுந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டின் பின்பகுதியில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் காந்த் (28) என்பவர் பாத்ரூம் உள்ளே புகுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமி சத்தமிட்டதும் அங்கிருந்து காந்த் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் காந்தை போக்சோ சட்டத்தின்கீழ் நேற்றுமுன்தினம் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

The post முத்துப்பேட்டை அருகே சிறுமி குளித்த பாத்ரூமில் நுழைந்த வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Muthupupat ,Poxo ,Muthupapetta ,Muthupapet ,Pauxo ,Muthuppat ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் போக்சோவில் கைது