×

கல்குவாரியில் குதித்து தம்பதி தற்கொலை

கிணத்துக்கடவு: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூரில் தண்ணீர் நிரம்பிய நிலையில் பாழடைந்த கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் ஆண், பெண் சடலம் மிதப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. விசாரணையில், இறந்தவர்கள் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவை சேர்ந்த மாரிமுத்து (68), மல்லிகா (55) என்பதும், இருவரும் கணவன், மனைவி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: இறந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு பத்து வருடத்திற்கு முன்பு திருமணமாகி விவகாரத்து பெற்று பெற்றோருடன் வீட்டில் இருந்தார். மகன் வேலைக்கு சென்றும் குடும்பம் நடத்த சிரமமாக இருந்ததால் இத்தம்பதி சிலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியமால் தவித்து வந்தனர். இதனால், மனமுடைந்த தம்பதி, நேற்று காலை ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்து வீட்டில் வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் ஏலூரில் இருக்கும் பாழடைந்த கல்குவாரிக்கு சென்று சாணிப்பவுடர் குடித்துவிட்டு கல்குவாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post கல்குவாரியில் குதித்து தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kalguari ,Elur ,Govai ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து:...