×

வளசரவாக்கத்தில் ஏசி, காப்பர் வயர்கள் திருட்டு; 2 பேர் கைது: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில், ஏசி, காப்பர் வயர்களை திருடிய 2 பேரை போலீசார் கைது விசாரிக்கின்றனர்.சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(34). ஏசி மெக்கானிக். வாடிக்கையாளர்களின் ஏசி மெஷின்களை வீட்டில் வைத்து சரி செய்து மீண்டும் அவர்களின் வீட்டில் பொருத்துவதற்காக வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் வைத்திருந்த ஏசி மெஷின் மற்றும் காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். புகாரின்பேரில், ராமாபுரம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, போலீசார் ராமபுரம் பகுதியில்நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு நபர்களை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது, முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதில் கூறினார்கள். இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர்கள் நெற்குன்றத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணன்(24), அருண்(22), என்பதும், இருவரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடி வந்து ஜெயக்குமார் வீட்டில் இருந்த ஏசி மெஷின்கள் மற்றும் காப்பர் வயர்களை திருடி சென்றதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், காப்பர் வயர்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது, பல்வேறு காவல் நிலையங்களில், பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post வளசரவாக்கத்தில் ஏசி, காப்பர் வயர்கள் திருட்டு; 2 பேர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Valasaravak ,Poontamalli ,Valasaravakkam ,Ramapuram ,Chennai Valasaravakkam ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...