திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இஸ்லாமிய பெருமக்களுக்கு இஃதார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இன்பநாதன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, சந்திரசேகரன், இளங்கோவன், சிற்றம் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ஞானகுமார், நகர, ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி, இ.என்.கண்டிகை ரவி, சீனிவாசன், ராமஞ்சேரி மாதவன், ரவிச்சந்திரன், ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராம்குமார், எழிலரசன், வேல்முருகன், வினோத்குமார் ஜெயின், ராஜி, ஜோதி, உதயகுமார், சௌந்தர்ராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இப்தார் நோன்பை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து அனைத்து மதத்தினரும் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். பிறகு அனைவருக்கும் நோன்புக் கஞ்சி கொடுக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்ட தலைமை ஆஜி அமீர்கான், காதர் பாட்சா, அமீர்கான், தியாகு, குமரேசன், ரகு, சரவணன், ஹனீபா, கமுருதீன், ரிஸ்வான், அமீத்பாஷா, தமீன், பக்கீர், அப்பாஸ், பஷீர், சஷேக் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
The post திருவள்ளூரில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு: முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.