×

கீழானூரில் 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?

  • ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சட்டசபையில் கேள்வி
  • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் பதில்

திருவள்ளூர்: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், வெள்ளியூர், விளாப்பாக்கம், கீழானூர் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 3 நாட்களாக விவசாயிகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே கீழானூர் துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின் புதைவிட கம்பி பழுதாகி உள்ளது. இதனால் கீழானூர் கிராமத்தை சுற்றியுள்ள 30 கிராம விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் தடைப்பெற்றுள்ளது.

செவ்வாப்பேட்டை ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தின் அடியில் மின் புதைவிட கம்பி செல்வதால், பழுதை சீர்செய்ய ரயில்வே நிர்வாக அனுமதி அளிப்பதில் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில் பழுதடைந்துள்ள மின் புதைவிட கம்பியை சீர் செய்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு வர முடியாமல் உள்ளது. இதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி தர தாமதிக்கின்ற காரணத்தால், விவசாயிகள் பெரிதும் பாதிகப்பட்டுள்ளனர். ஆனால், அதே கீழானூர் பகுதியில் 33 கேவி துணை மின் நிலையம் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கீழானூரில் பகுதியில் 110 கே.வி. துணை மின் நிலையமாக மாற்றி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றன.

எனவே துணை மின் நிலையம் அமைப்பதர்கான பணிகள் மிக விரைவாகத் தொடங்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சுட்டிக்காட்டிய பகுதியில் மின் துறை அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். அந்த பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதே போல், கீழானூரில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுவிட்டன. டெண்டர் கோரக்கூடிய பணிகள் இப்போது நடைமுறையில் இருக்கிறது. அது முடிந்த பிறகு துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி அளித்தார்.

The post கீழானூரில் 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Geezhanur ,Tiruvallur ,Poontamalli ,MLA ,A. Krishnasamy ,Tamil Nadu Legislative Assembly ,Velliyur ,Vlapakkam ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...